என்நெஞ்சமே
நட்பின்றி நாள் இன்று வாடுதே ஏனோ உப்பின்றி சமையல் என்றேனும் சுவைத்திடுமோ களைப்பின்றி வாழ்க்கையும் நகர வந்தாயோ நீயின்றி எவ்வுலகமும் நரகமென ஆனதோ தேரின்றி தெய்வமும் வளம் வரக்கூடுமோ தீயின்றி சுடரொன்று தோன்ற வழியுமுண்டோ நானின்றி அங்கு என்செய்கிறாயோ குறையின்றி துடிப்பது இங்கு உன்னெஞ்சமோ வாளுமின்றி வேலுமின்றி போரும் ஒன்று நடக்குதோ வானுமின்றி மேகமின்றி மழையுமொன்று பெய்யுதோ வழியுமின்றி நாம் கூட நாளும் இங்கு செல்லுதோ!