முதல் நாள்!
உன்னிடம் காதல் சொல்லிட நானும் வந்தேன் நீ பார்வை ஒன்றை மட்டும் தந்தாய் அதை அங்கு உணர்திடவே நான்; அன்றே புது கவிஞனும் ஆனேன்! உன் கால் கொலுசுமணி சத்தம் முதல் கார்மேக கூந்தலின் நுனி இதுவரை நான் கண்டது ஒரு பென்னை இனி இங்கு நான் காண்பது; பிரமன் சிந்திய கற்பனை துளியை! கண்களை மீனென்று கூற முடியவில்லை யாரேனும் உண்டுவிடுவார்களோ என்று அஞ்சி; என்ன செய்ய சைவமாக பிறந்துவிட்டேனடி! நானும் உன் கை கோர்த்து நடந்திட இதுவரை பார்த்து படித்ததேதும் ஞாபகம் இல்லாமல் போயினும் நியூட்டன் விதியின் உவமை கதை சொல்லும் உண்மை மட்டும் நெஞ்சில் நிற்க; இன்ன்றைக்கு இது போதும் என்று நீயும் விலக; விட்டு விலக மனமில்லாமல் நானும் தவிக்க; இதுவல்லவோ காதல் என்று நீயும் எண்ணி நகைக்க; இதுதானே காதல் என்று நானும் சொல்லி வருந்திட; முதல் நாள் காதல் முற்றிட்டு!