Posts

கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​

அண்ணனிடம் சண்டைபோட்டு அக்காளிடம் கோபம்கொண்டு சிற்றப்பவின் பிடியில் விலகி பெரியம்மாவின் பேச்சை தட்டி தோட்டதிலிருந்து வந்த தாதாவை முந்தி மாக்களை என்னிகொண்டிருந்த பாட்டியிடம் கேட்டேன் கூடையோடு தருவியா? கூறு கட்டுவியா?​ என்று அத்தனையும் உணக்குதான் ராசா என்றால் அவள்! ;)

உருகியே நானும்

உன்னை நினைத்தே நானும் உருகிநேனடி தெரியவில்லையா? எந்தன் கண்ணீர் ஆவியாகியே சுற்றுதே உன்னை; கண்முன் தோன்றவில்லையா  ரத்தம் மொத்தம் சிந்தினேன் வெளியே; உன்முகத்தை காட்டிட அதில், காணவில்லையா? இன்று மட்டும் மலர்ச்செண்டு ஒன்று தந்தாயே வாசம் ஏதும் அறிகிலேன், வானுலகிலே!

முதல் நாள்!

உன்னிடம் காதல் சொல்லிட நானும் வந்தேன் நீ பார்வை ஒன்றை மட்டும் தந்தாய் அதை அங்கு உணர்திடவே நான்; அன்றே புது கவிஞனும் ஆனேன்! உன் கால் கொலுசுமணி சத்தம் முதல் கார்மேக கூந்தலின் நுனி இதுவரை நான் கண்டது ஒரு பென்னை இனி இங்கு நான் காண்பது; பிரமன் சிந்திய கற்பனை துளியை! கண்களை மீனென்று கூற முடியவில்லை யாரேனும் உண்டுவிடுவார்களோ என்று அஞ்சி; என்ன செய்ய சைவமாக பிறந்துவிட்டேனடி! நானும் உன் கை கோர்த்து நடந்திட இதுவரை பார்த்து படித்ததேதும் ஞாபகம் இல்லாமல் போயினும் நியூட்டன் விதியின் உவமை கதை சொல்லும் உண்மை மட்டும் நெஞ்சில் நிற்க; இன்ன்றைக்கு இது போதும் என்று நீயும் விலக; விட்டு விலக மனமில்லாமல் நானும் தவிக்க; இதுவல்லவோ காதல் என்று நீயும் எண்ணி நகைக்க; இதுதானே காதல் என்று நானும் சொல்லி வருந்திட; முதல் நாள் காதல் முற்றிட்டு!

சேனாபதி போற்றி!

குன்று தோறும் காட்சி தந்தாய் குமரகுரு குறவன் மகள் கைபிடிதாய் வள்ளிமனால முருகு எனும் சொல்லலே தமிழுக்கும் அழகு சேர்த்தாய் முக்காலமும் உணர்தவனனாய் முத்துக்குமர வேலுன்டென்று நினைத்தோர்க்கு வல்வினையை நீகினாய் ஸ்கந்தகுரு மயிலுன்டென்று சொன்னோர்க்கு அச்சத்தை தவிர்த்தாய் குருகுகா சூரனை வதை செய்து சேவற்கொடி அசைத்தாய் கார்த்திகேயா சூழ வந்த துயர் போக்கி தேவர்குடி காத்த வேலோய் போற்றி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!

காலை பனித்துளிகள் கள்ளமின்றி கூறியதென்ன  மொட்டுக்கள் பூக்கும் வேளையில்  வண்டுகளிடம் போய் கூரச்சொன்னதென்ன கன்றுகளும் தன் தாயிடம் வாழ்த்தொன்று  கூற அறிவுரையும் கேட்டதென்ன  இங்கு கூர விரும்புவதும் என்ன  வாழ்வில் இன்னாள் மட்டும் இல்லாமல்  என்னாளும் சிறப்புற்று இருக்க  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!

காத்திருந்த கண்கள்

அன்பே உன்னை ஏன் உன் பெற்றோர் மறைத்து மறைத்து வைகிறார்கள் கருப்பு பணமா நீ??

பொற்பாதம் சரணடைந்தேன்

நச நெரிசலில் உன்னை காண நாடினேன்  பராபரமே எம்மையும் பார்பீரொ!  விச பொருளே ஆயினும், துயர் தீர்த்திட பருகிட்டாய் நல்வழியை எமக்கு கான்பிப்பீரொ!  திசை என்னும் வடிவில் நாட்புறமும் சூழ்ந்தாய் ஈசனே எம்மை ஆட்கொல்வீரோ!